2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘இனங்களிடையே தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும்’

Editorial   / 2020 ஜனவரி 04 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை - சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும்  பெண் உத்தியோகத்தர்   தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு

சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும்  பெண் அரச உத்தியோகத்தரை  அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் புதுவருடப் பிறப்பின்போது  அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வில் தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர் தற்போது 3 நாட்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் வெள்ளிக்கிழமை(3) இரவு  சம்பவத்தை அறிந்து குறித்த பெண் அரச ஊழியர் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கு சென்று நலன் விசாரித்தார்.

இவ்வாறான தாக்குதல் முயற்சி அநாகரீகமானது எனவும் இவ்வாறான நிலைமை தொடருமானால் இனங்களுக்கிடையே தேவையற்ற பிரச்சினைகள் உருவாகக் கூடுமெனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .