2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

இன்று பல பகுதிகளில் பலத்த மழை

Freelancer   / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, வடக்கு மாகாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 
 
மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். 
 
ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X