2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’இம்முறையும் சரியான தீர்மானத்தை பிரதமர் எடுப்பார்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சரியான தீர்மானம் மேற்கொண்டிருந்ததாக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அதனைபோல, 2019ஆம் ஆண்டும் பிரதமர் சரியான தீர்மானத்தை மேற்கொள்வார் என்றும், எரான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர், இன்றைய தினம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமான தெரிவு செய்யப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களே அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .