Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 04, சனிக்கிழமை
J.A. George / 2024 ஏப்ரல் 19 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் இரு வேறு இடங்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய மடுவன்வெல கொலனி பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த 71 வயதுடைய நபர் நேற்று (18) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் தென்னை நார் உற்பத்தி தொழில் செய்து வந்ததாகவும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று (18) காலை அரலகங்வில பிம்புரத்தேவ ஏரியின் சடலமொன்று மிதந்துள்ளது.
முல்கலயாய 01 பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடந்த 17ஆம் திகதி பிம்புரத்தேவ ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளதுடன், அங்கு மற்றுமொரு நபருடனும் தனது மனைவியுடனும் மதுபானம் அருந்தியுள்ளார்.
இதன் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 67 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago