Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 01 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு எதிரான, எவ்வாறானதொரு இராஜதந்திர செயற்பாட்டை எடுப்பதற்கு அவசரப்படவேண்டாம் என தெரிவித்துள்ள சபாநாயகர் கருஜயசூரிய, இந்த பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் தீர்வை எட்டுவதற்கு தான் தலையிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரங்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று (31) இடம்பெற்றது.
இதன்போது நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் தொடர்பில் சபாநாயகருடன் அப்பிரதிநிதிகள் கலந்துரையாடினர். இலங்கையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத அரசியல் மாற்றம் தொடர்பில் தமது கவலையடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்..
இந்த நிலைமை காரணமாக நாட்டுக்கு ஏற்படபோகும் நெருக்கடிகள் தொடர்பிலும் சபாநாயகருக்கு உயரதிகாரிகள் எடுத்துரைத்தனர்
அரசமைப்புக்கு அமையவும், ஜனநாயக முறையிலும் விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கைக்கு எதிராக எந்தவொரு இராஜதந்திர நடவடிக்கைகளையும் அவசரப்பட்டு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025