2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இலங்கை மீனவர்கள் படகுடன் கைது

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் பிரதேச கடற்பிராந்தியத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட  இலங்கை மீனவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இரவு குறித்த மீனவர்களை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,  சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்திய டிங்கி படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் டிங்கி படகை, மேலதிக விசாரணைகளுக்காக  மூதூர் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .