2025 ஜூன் 05, வியாழக்கிழமை

இலங்கையில் மெட்ரோ பேருந்து விரைவில்

R.Tharaniya   / 2025 ஜூன் 03 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக வசதியான மற்றும் உயர் தொழில்நுட்ப பேருந்துகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தபடுவதாக பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டது.

அதற்கமைய கொழும்பு, மக்கும்புர (கொட்டாவ), கடுவெல, கடவத்த மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட பல பிரதான வழிகளில் இடைவழிகள் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான சொகுசான, தாழ்வான மிதிபலகை கொண்ட 100 பேரூந்துகளை சேவையில் அமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.  

இது 2007 ஆம் ஆண்டு 7 ஆம் எண் கொண்ட நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து வாரியத்தின் கீழ் ஒரு துணை நிறுவனத்தை நிறுவுவதற்கும், முன்மொழியப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .