2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Freelancer   / 2025 ஒக்டோபர் 10 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதனால் ஏற்படும் மின்னல் ஆபத்துகளை குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க, மரங்கள் மற்றும் உயரமான பொருட்களுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்கவும், மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.   R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X