2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இலஞ்சம் பெறச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் கைது

Freelancer   / 2025 ஜூலை 09 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க சந்தேகநபர்களிடமிருந்து 200,000 ரூபாய் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரியும் மற்றொரு அதிகாரியும் இன்று (9) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பத்தில் 20,000 ரூபாவை பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள 180,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ள சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

தலைமறைவான பொலிஸ் அதிகாரி மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய பிற தரப்பினரைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .