2025 மே 22, வியாழக்கிழமை

இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீட்டியாகொடை, நவாகன்னகொல வத்தே பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, இன்று செவ்வாய்க்கிழமை (15) மதியம் 1. 30 க்கு இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞனே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரி இனங்காணப்படாத நிலையில், துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பில், மீட்டியாகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .