2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இளைஞர்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் படுகாயம்

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

இணுவில், கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் நேற்று (02) இரவு வாள்வெட்டுச் சம்பவமாக மாறியதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைக்காலைச் சேர்ந்த குழு ஒன்று மற்றொரு குழுவுக்கு நேற்று முன்தினம் தாக்கியுள்ளது. 

அதற்குப் பழிதீர்க்கும் வகையில் நேற்று காரைக்காலைச் சேர்ந்த குழு மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .