2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

‘இஸ்ரேலுக்குப் பணியாளர்களை அனுப்ப தனியாருக்குத் தடை’

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலுடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள இராஜதந்திர  ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும்  செயற்பாட்டை, எதிர்காலத்தில் அரசாங்கம் மாத்திரமே மேற்கொள்ள எண்ணியுள்ளதுடன், தனியாருக்கு சந்தர்ப்பம் இல்லை எனவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக  அதிகாரிகளுடன், தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  இஸ்ரேல் நாட்டுக்குப் பணியாளர்களை அனுப்புவதற்காக,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், அதிகளவான பணத்தை அறவிடுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்  இதனாலோயே, மேற்கண்ட  தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, தனியார் முகவர் நிலையங்கள் மூலம் இஸ்ரேலுக்குப் பணியாளர்களை அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக மாத்திரம் பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால, இஸ்ரேலுக்குப் பணியாளர்களை அனுப்புவதாக, தனியார் முகவரகங்கள் கூறினால், அவ்வாறான பொய் பிரசாரங்களுக்கு  ஏமாற வேண்டாம்  எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .