2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்

Simrith   / 2025 ஜூலை 09 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அல்லது 'பிள்ளையான்', மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்ததாகவும், விசாரணைகளின்படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்து அவருக்குத் தெரியும் என்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதே கொலை தொடர்பாக மட்டக்களப்பு சிறையில் இருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுடன் பிள்ளையான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாக அவர் கூறினார்.

சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .