Editorial / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
துனகஹா-கொடிகமுவ சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒருவர் கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் இத்தகொதெல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
உணவகத்தில் இறந்தவரின் மனைவிக்கு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்றபோது, உணவகத்தின் உரிமையாளரும் மேலும் இரண்டு பேரும் தம்பதியினரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மனைவி திவுலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலைமறைவான சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago