2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலக நாடுகளின் கழிவுகள் இலங்கையில் குவிகின்றன

Simrith   / 2023 ஜூன் 07 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள்  கரையொதுங்கியுள்ளன . சீனா, இந்தியா, பங்களாதேஷ், மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்கரையில்  கரையொதுங்கியுள்ளன.

பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை - சீன கருத்தரங்கில் கலந்து கொண்ட ருகுணு பல்கலைகழகத்தின் கலாநிதி டேர்னி  பிரதிப்குமார இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கையின் கடற்கரைகளில் 32 மில்லியன் கிலோ கிராம் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல நாடுகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் இதில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .