2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

உலகின் மிகப்பெரிய பாம்பு கொல்லப்பட்டது

Mayu   / 2024 மார்ச் 27 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய பாம்பு என விலங்கியல் வல்லுநர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய 26 அடி நீளமான அனகோண்டா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமேசான் காடுகளின் பழங்குடியினரால் வழிநடத்தப்பட்ட 15 விலங்கியல் வல்லுநர்கள் கொண்ட சர்வதேச குழு, கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் ஆற்றின் துணை நதியில் இந்த மிகப்பெரிய அனகோண்டாவைக் கண்டுபிடித்தது. இந்த பெண் அனகோண்டாவுக்கு 'அன்னா ஜூலியா' என்று பெயரிடப்பட்டது.

அனகோண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாக கருதப்படுகின்றன. அனகோண்டாக்கள் மலைப்பாம்பு வகை. அனகோண்டாக்களில், 'அன்னா ஜூலியா' மிகப்பெரிய அனகோண்டாவாகக் கருதப்பட்டது. 'அன்னா ஜூலியா' என்பது வடக்கு பச்சை அனகோண்டா ஆகும், மேலும் வடக்கு பச்சை அனகோண்டாக்கள் அனகோண்டாவின் புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X