2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

உலக்கையால் தாக்கியதில் உலகை விட்டு பிரிந்தார்

Mithuna   / 2024 ஜனவரி 14 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்புணர முயற்சி செய்வதற்கு முயற்சித்த வேளையில், வீட்டிலிருந்த உலக்கையால் அப்பெண் தாக்கியதில் சந்தேகநபர் மரணமடைந்த சம்பவமொன்று அங்கொட - அளுத்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது, அப்பெண்ணின் கணவரும் வீட்டில் இருந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது

அளுத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது தாக்கியதாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த அங்கொட பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .