S. Shivany / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர்ந்த பாக்குகள் அடங்கிய, 23 கொள்கலன்களை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்துவந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபரை, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியபோதே, இந்த விடயம் குறித்த தகவல்கள் வெளியானதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026