Simrith / 2025 மார்ச் 09 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் நிறைந்த உள்ளூராட்சி சபைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் வ்ரே காலி பல்தசார் கூறுகிறார்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் மாற்றங்களைச் செய்வதுதான் பாராளுமன்றத்தின் முடிவுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஒரே வழி என்று அவர் கூறினார்.
"நாங்கள் பாராளுமன்றத்தை மாற்றியுள்ளோம். இப்போது, உள்ளூராட்சி அமைப்புகளின் அமைப்பை மாற்றுவது அவசியம். அந்த மாற்றத்தைச் செய்ய மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர்களுக்குப் பதிலளிக்கும் போது வ்ரே காலி பல்தசார் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல, வ்ரே காலி பால்தசாரின் வெற்றியில் நம்பிக்கை தெரிவித்தார்.
"வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், அவர் அடுத்த கொழும்பு மேயர் ஆவார்," என்று அவர் மேலும் கூறினார்.
35 minute ago
46 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
46 minute ago
53 minute ago
1 hours ago