A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில், காட் விளையாட்டு, குழுவாக விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கம்பஹா மாட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறையில் மூன்று பொலிஸ் பிரிவுகளிலும், வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ, முல்லேரியாவ மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் வீதிகளில், ஒழுங்கைகளில் மற்றும் அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடமுடியாது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில், அக்கம் பக்கத்தினருடன் விளையாடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை பேணும் வகையிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago