2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு குறித்து தீர்மானம் இல்லை

S. Shivany   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது குறித்த எத்தகைய தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லையென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமுலாகுமென நேற்று வாட்ஸ்அப் ஊடாக போலியான செய்தி வெளியானதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .