2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

Editorial   / 2020 மே 28 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) மற்றும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 3 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

தொடர்ந்து ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பின்னர், எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .