2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கை மீறிய 19,441 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 19,000 க்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல்  நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நாள் முதல் இன்று (09) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில், ஊரடங்கை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 19,441 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, 5,082 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,724 பேர் கைதுசெய்யப்பட்டும், 496 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .