2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

ஊழியர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தல்

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர வர்த்தக வலயங்களில் காணப்படும் கைத்தொழில் பேட்டைகளில் கடமையாற்றும் ஊழியர்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுத்தினரின் தலையீட்டுடன் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.

கைத்தொழில் பேட்டைகளில் கடமையாற்றும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை சந்தித்து வருவதாக  கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார.

கட்டுநாயக்க பியகம மற்றும் சீத்தாவாக்கை ஆகிய சுதந்திர வர்த்தக வலயங்களில் காணப்படும் தொழிற்சாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .