2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

எச்சரிக்கும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்

S. Shivany   / 2021 ஜனவரி 05 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு எதிராக இன்று(05) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை மீறினால், அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம், பிசிஆர் அல்லது என்டிஜன் சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை மீறிச் செயற்படுவதால், சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார வழிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .