2025 ஜூலை 07, திங்கட்கிழமை

எதிர்க்கட்சியால் பல குழுக்கள் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 30 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பாக போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, எதிர்க்கட்சியால் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் சகல தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில், அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றப் போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில், கலந்துரையாடுவதற்கு பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய அதற்கமைய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .