2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

எரிவாயு முற்பதிவுக்கு செயலி அறிமுகம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் உள்ள தங்களது உறவினர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை முற்பதிவு செய்வதற்கு வசதியாக, எரிவாயு சிலிண்டர்களை முற்பதிவு செய்வதற்கான செயலியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தமது உறவினர்களுக்கான எரிவாயு சிலிண்டர்களை அருகிலுள்ள விற்பனை முகவர்களிடம் முற்பதிவு செய்ய முடியும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.

டொலர்களைப் பயன்படுத்தி செயலி மூலம் சிலிண்டர்களை கொள்வனவு செய்யலாம் என்றும், நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்கும் நடவடிக்கையாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .