Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிமையாளரும் கராத்தே சம்பியனுமாகிய வசந்த சொய்சாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான, எஸ்.எப்.லொக்கா என்று அழைக்கப்படும் இரோன் ரணசிங்கவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் உமேஷ் ஷானக்க கலன் சூரிய, நேற்று செவ்வாய்க்கிழமை(24) உத்தரவிட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை(24) உத்தரவிட்டுள்ளார்.
சிலாபம் நகருக்கு அண்மித்த பிரதேசத்தில் பயணித்துகொண்டிருந்த போது நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் அநுராதபுரம் பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
அவரின் சகோதரரான ஹசித்த ரணசிங்க 31ஆம் திகதி தங்கல்ல நகரத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல்யமான இந்த இரவு விடுதிக்குள் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11.45க்கு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களால் அதன் உரிமையாளர் கராத்தே சம்பியனான வசந்த சொய்சா பலியானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
29 minute ago
41 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
55 minute ago