2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஏத்துகல கடலில் மூழ்கிய நால்வர் மீட்பு

Editorial   / 2025 ஜூலை 07 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீர்கொழும்பு - ஏத்துகல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை காப்பாற்றப்பட்டுள்ளனர். 

வேயாங்கொடை, பூண்டுலோயா மற்றும் நமுனுகுல பிரதேசத்தில் வசிக்கும்  20, 21, 22 மற்றும் 34 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர். 

  இளைஞர்கள் நால்வரும் ஏத்துகல கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர். இதனை அவதானித்த ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் நான்கு இளைஞர்களையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .