Editorial / 2026 மார்ச் 03 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.
பீயேர்ஷெபா பகுதிக்கு ஈரான் ஏவிய ஏவுகணையை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும், அதன் சிதறல்கள் குறித்த இலங்கை பெண் பணிபுரிந்த வீட்டின் மீது விழுந்துள்ளதாகவும் திரு. பண்டார குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த இலங்கை பெண் அந்த வீட்டில் பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
காயமடைந்ததையடுத்து அவர் சொரோகா மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருந்ததால், மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு தற்போது வீடு திரும்பியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.
அவரது நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என்றும் இலங்கை தூதுவர் நிமால் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
16 minute ago
25 minute ago
44 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
44 minute ago
51 minute ago