Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் அதற்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று (27), இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எத்தகைய பிளவும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்து, எம்மை பலவீனப்படுத்த முயல்கிறார் என்றார்.
அத்துடன், தற்போது நாடாளுமன்றத்தில் 123 பேரின் ஆதரவு தமது கட்சிக்கு உள்ளதாகவும் அஜித் பீ.பெரேரா மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago