2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஐ.தே.கட்சியின் பிரதான அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்

Freelancer   / 2024 மார்ச் 26 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை எல்தெனியவிலுள்ள  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அலுவலகத்தின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டே இன்று (26) வீசப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் காரணமாக இந்த கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கட்சி அலுவலகத்துக்கு  முன்பாக உள்ள வீதியில் ஒரு கைக்குண்டும் கட்சி அலுவலகத்துக்குள்  மற்றொரு கைக்குண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டாலும், வெடிகுண்டு வெடிக்காததால், நடக்கவிருந்த அழிவு தவிர்க்கப்பட்டது என, பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X