2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 7ஆம் திகதி விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, நேற்று திங்கட்கிழமை(30) உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச,ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை, விசாரணை செய்யவுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல்  குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, நேற்று திங்கட்கிழமை (30) கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி, 2.5 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X