2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கொள்ளையர்களை பிடித்த போது, துப்பாக்கி வெடித்தது

George   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைதுசெய்ய முயற்சித்த போது துப்பாக்கி வெடித்ததில் போத்தல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர், புதன்கிழமை(17) இரவு காலி, கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளையர்களை கைதுசெய்ய முயன்றபோது அவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அதன்போது அவர்களை பின்தொடர்ந்த குறித்த பொலிஸ் அதிகாரி, கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது அவரது உத்தியோகபூர்வ துப்பாக்கி தனாக இயக்கம் பெற்று வெடித்துள்ளது.

இதன்காரணமாக அவரது காலில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உப பொலிஸ் பரிசோதகர் காயமடைந்த நிலையில், ஏனைய பொலிஸார் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அவருக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை 4 உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5