2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக பாராளுமன்றில் சஜித் குரல்

Freelancer   / 2023 ஜூன் 07 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற சிறப்புரிமைகள் அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைக்கு வந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டமை நியாயமான செயல் அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன.அது வேறு விடயம். ஆனால் பாராளுமன்றம் வரமுன்னர் அவரை கைது செய்தமை நியாயமான செயல் அல்ல. பாராளுமன்ற சிறப்புரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச இதுவிடயத்தில் தெளிவான ஆணையொன்றை வழங்கியுள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்றார் . R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X