2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கஞ்சா கடத்திய மூவர் கைது

Freelancer   / 2024 மார்ச் 24 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் யாழ். காரைநகர் பகுதியில் வைத்து ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒருவரிடம் கஞ்சா இருந்தவேளை பொலிஸார் அவரைக் கைது செய்த சமயம் தனக்குக் கஞ்சா வழங்கியதாக இருவரின் தொலைபேசி இலக்கங்களை அவர் வழங்கியிருந்தார். கஞ்சாவுக்கான பணம் இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் கஞ்சாவுக்கான பணத்தை வந்து பெற்றுக்கொள்ளுமாறு கஞ்சாவை உடமையில் வைத்திருந்தவர் விநியோகித்தர்கள் இருவருக்கும்  தொலைபேசியில் தகவல் வழங்கியிருந்தார்.

தொலைபேசித் தகவலை நம்பி அதற்கானப் பணத்தைப் பெற இருவர் வந்து கஞ்சாவை உடமையில் வைத்திருந்தவரிடம் பணத்தைப் பெற முயன்ற சமயம் மறைந்திருந்த பொலிஸார் பணத்தைப் பெற்றுக்கொள்ள சம்பவ இடத்துக்கு வந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்ட இருவரும் கடற்படையினர் என்பது பின்னர் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X