2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

கடுங்காற்று வீசும் : கடும் மழை பெய்யும்

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் தீவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை மத்த தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் ஜனவரி 8 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, மத்திய, ஊவா, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்றிரவு சில நேரங்களில் மழை பெய்யும் என்றும், ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. "நாளை(07), ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும், சில பகுதிகளில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .