2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கடமான் இறைச்சியுடன் இருவர் கைது

Editorial   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனாத்தவில்லுவ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியின் போது, ​​சட்டவிரோதமாக கடமான் இறைச்சியை வைத்திருந்ததற்காக, வனாத்தவில்லுவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகளால் இரண்டு வேட்டைக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று கைது செய்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 74 கிலோ  500 கிராம் கடமான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டனர்.

 

கடமான் என்பது வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் ஒரு பாலூட்டியாகும். சந்தேக நபர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட இறைச்சி கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்களா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன. சட்டவிரோத வேட்டை நடவடிக்கைகளைத் தடுக்க வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்களும்   புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (14)  ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், அதன் பிறகு நீதவான் அவர்களை தலா ரூ. 200,000 சரீர பிணையில் விடுவித்தார். வழக்கு 2026 பெப்ரவரி 22 ஆம் திகதி மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .