2025 ஜூலை 05, சனிக்கிழமை

கட்டுநாயக்கவில் இலங்கைப் பிரஜை கைது

Editorial   / 2019 ஜனவரி 04 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜீ.கபில

டுபாயிலிருந்து சட்டவிரோதமானமுறையில் எடுத்துவரப்பட்ட சிகரட்டுகளுடன், இலங்கை பிரஜையொருவர்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (04) அதிகாலை, விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் பயணப் பொதியிலிருந்து, 16,50,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பிலான, 30,000 சிகரெட்டுகள் அடங்கிய 150 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .