2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கண்டி நில அதிர்வு; விசாரிக்க குழுவொன்று நியமனம்

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியின் பல பிரதேசங்களில் உணரப்பட்ட அதிர்வு தொடர்பிலான விசாரணைகளுக்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்படவுள்ளது.

புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
கண்டியின் குண்டசாலை, பன்வில மற்றும் வத்தேகம உள்ளிட்ட சில பகுதிகளில் அண்மையில் மீண்டும் அதிர்வு பதிவானது.

தமது 04 மத்திய நிலையங்களில் அதிர்வுகள் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .