2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கண்டியில் உணரப்பட்ட நில அதிர்வு; ஆய்வுக்காகச் சென்ற விசேட குழு

Editorial   / 2020 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-  தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் பலவற்றில் ​நேற்று (29) இரவு உணரப்பட்ட அதிர்வு தொடர்பான ஆய்வுகளை, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆரம்பித்துள்ளது.

 

சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையத்தின் புவியியல் பிரிவுக்கு பொறுப்பான நில்மின தல்தென உள்ளிட்ட விசேட நிபுணர்கள் குழாமால், இந்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

நேற்று இரவு 8.30 மணியளவில் கண்டி, தலாத்துஓயா, திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் அதிர்வு ஒன்று உணரப்பட்டதையடுத்தே, இது தொடர்பான ஆய்வுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .