2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்கு

Janu   / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது

 மோசமான வானிலையைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறி கடைகளை ஆய்வு செய்தபோது, ​​வியாபாரி ஒருவர் ஒரு கிலோ கேரட்டை 3,500ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X