2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொல்லப்பட்ட நிலையில் யானைகளின் உடல்கள்

Janu   / 2025 ஜூலை 22 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை, இனாமலுவ காப்புக் காட்டில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கொம்பன் யானை மற்றும் ஐந்து யானைகளின் உடல்கள் சிதறி கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கொம்பன்  மற்றும் இரண்டு யானைகளின் உடல்கள் இருக்கும் இடங்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை (22) அன்று  ஊடகவியலாளர்களுக்கு காட்டியுள்ளனர்.

மீதமுள்ள மூன்று யானைகளின்  உடல்கள் இருக்கும் இடங்களுக்கு செல்லும் பாதையில் பொறித் துப்பாக்கி பொருத்தப்பட்டிப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.  

கொம்பனின்  தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளமை அங்கிருந்த  பாகங்களால் உறுதிப்படுத்தப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .