2024 மே 08, புதன்கிழமை

கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள், தங்களது வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர முடிவு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அம்பலப்படுத்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டடிக்காட்டினார்.

இருப்பினும், அமைச்சருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர்,  அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மற்றொரு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக கல்வியமைச்சர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X