2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கல்கிஸ்சையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 07 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
 
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 
 
36 வயதுடைய கல்கிஸ்சை வட்டரப்பல பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .