Editorial / 2025 நவம்பர் 27 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.
அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாகவும் கடல் கொந்தளிப்பு காரணமாகவும் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள வள்ளங்கள் தோணிகள் படகுகளை கரையை நோக்கி மீனவர்கள் நகர்த்தி வருகின்றனர்.
மேலும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்கள் வீண் பொழுது போக்கு விடயங்களுக்காக இப்பகுதிக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago