Editorial / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லும் வயதிலிருந்தும், பாடசாலைக்குச் செல்லாத 161 சிறுவர்கள் 2025ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் தொடங்கொட பிரதேச செயலகப் பிரிவில் பதிவாகியுள்ளனர்.
களுத்துறை மாவட்டச் செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின்படி, பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை வருமாறு:
அடையாளம் காணப்பட்டவர்களில் 42 சிறுவர்கள் ஏற்கனவே மீண்டும் பாடசாலைகளுக்குத் திரும்பியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதில் களுத்துறை (2), மத்துகம (6), பண்டாரகம (6), தொடங்கொட (6), மதுராவல (1) மற்றும் பாலிந்தநுவர (6) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12 பிரிவுகளில் 'பாடசாலை கண்காணிப்புக் குழுக்கள்' அமைக்கப்பட்டுள்ளன. எனினும், பேருவளை மற்றும் மத்துகம ஆகிய இரு பிரிவுகளில் மாத்திரம் இக்குழுக்கள் இதுவரை அமைக்கப்படவில்லை என அதிகாரிகள் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.
சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்பத் தவறுவது சட்டப்படி குற்றமாகும். உங்கள் பகுதியில் பாடசாலை செல்லாத சிறுவர்கள் யாராவது இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்ய ஒத்துழைப்போம்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago