Mayu / 2026 மே 21 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கிராண்ட்பாஸ் ஃபெர்குசன் வீதிப் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரக் கூச்சலைத் தொடர்ந்து, வாலிபர் ஒருவர் மர்மக் கும்பலால் கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூரச் சம்பவத்தில், மோதரை உயானா அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 31 வயதுடைய வாலிபரே இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஃபெர்குசன் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் திடீரென இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலா, அல்லது போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் நீண்டகாலப் பகையா என்ற கோணங்களில் கிராண்ட்பாஸ் பொலிஸார் தங்களது விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இக்கொலையைச் செய்த பின்னர் மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் களம் இறக்கப்பட்டுள்ளன.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பில் இன்று (21) நீதவான் விசாரணைகளும், சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளும் நடத்தப்படவுள்ளன.
27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago