2025 மே 30, வெள்ளிக்கிழமை

குவைத்திலிருந்து 30 பேர் நாடு கடத்தப்பட்டனர்

R.Tharaniya   / 2025 மே 29 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசா இல்லாமல் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இலங்கையர்கள் கொண்ட குழு அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை (29) அதிகாலையில் அனுப்பப்பட்டனர்.

விசா இல்லாமல் குவைத்தில் தங்கி பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த இந்த இலங்கையர்கள் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தக் குழு, குவைத்திலிருந்து ஷார்ஜாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஏர் அரேபியா விமானம் G. 9 - 587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை (29) அதிகாலை 04.30 மணிக்கு அனுப்பப்பட்டது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர், அவர்கள் வீடு திரும்புவதற்குத் தேவையான பணத்தை வழங்கி, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .