2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்​மு -​ காஷ்மீரன் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள தொலை​தூர மலை கிராமத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்​பட்ட பெரு​வெள்ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி சி.ஐ.எஸ்.​எப். பாது​காப்பு படை வீரர்​கள் இரு​வர் உட்பட 46 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து அதி​காரி​கள் தெரிவிக்கையில், 
கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பின் காரண​மாக தீடீர் வெள்​ளப்​பெருக்​குடன் நிலச்​சரி​வும் ஏற்​பட்​டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 46-ஆக உள்​ளது. இன்​னும் பலர் இடி​பாடு​களுக்​குள் சிக்​கி​யிருப்​ப​தாக நம்​பப்​படு​வ​தால் இறப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என்று அஞ்​சப்​படு​கிறது. இது​வரை​யில் மீட்​கப்​பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது.

மீட்பு பணி​களில் என்.​டி.ஆர்​.எப், எஸ்​டிஆர்​எப், காவல்​துறை, இராணுவம், உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் பெரிய அளவில் ஈடு​பட்​டுள்​ளனர். நிலைமை மோச​மாக இருப்​ப​தால் என்​.டி.ஆர்.​எப்​-ன் இரண்டு புதிய குழுக்​கள் உட்பட மீட்பு பணி​யாளர்​களின் எண்ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது என்று தெரிவித்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .